ஒரு தொகை போதைப் பொருளுடன் நபரொருவர் கைது!

0

மட்டக்களப்பு -காத்தான்குடி பகுதியில் 6 லட்சம் ரூபாய் பெறுமதியுடைய ஐஸ் ரக போதைப் பொருள் வைத்திருந்த நபரொருவர் இன்று காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து சுமார் 6 லட்சம் ரூபாய் பெறுமதியான 86 கிராம் 356 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Leave a Reply