மீண்டும் கோரப்பிடியில் சிக்கிய இலங்கை!

0

கொவிட் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் நேற்றைய தினம் மேலும் புதிய தொற்றாளர்களாக 1,815 பேர் அடையாளங் காணப்படுள்ளனர்.

இதற்கமைய இவ்வாறு தொற்று உறுதியானவர்களில் 1,785 பேர் புத்தாண்டுக் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்றும் ஏனைய 30 பேரும் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் நாட்டில் கொவிட் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 293,113 ஆக அதிகரித்துள்ளது.

குறித்த தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 265,708 ஆக உயர்வடைந்துள்ளது.

மீண்டும் நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப் படுவதினால் பொது மக்கள் அனைவரும் குறித்த விடயம் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply