வீட்டிலுள்ள இயற்கைப் பொருளே நமது முகத்திற்கு பேரழகை கொடுக்கும்.

0

பெண்கள் அனைவரும் முகத்தை அழகு படுத்திக் கொள்வதற்கு பியூட்டி பார்லர் போவதை வழக்கமாக வைத்துக் கொள்வார்கள்.

பியூட்டி பார்லர் சென்று முகத்தை அழகு படுத்திக் கொள்வதையே பெண்கள் பெரிதும் விரும்புவார்கள்.

இந்த பியூட்டி பார்லரில் கெமிக்கல் கலந்த பொருட்களை பயன்படுத்தி சருமத்தில் அப்ளை செய்வதினால் சருமை அழகானது நாளடைவில் சுருக்கம், முகத்தில் பரு கரும்புள்ளிகள் போன்ற ஏராளமான பிரச்சனைகளை சந்திப்பதற்கு அதிக சந்தர்ப்பமுள்ளது.

ஆகவே வீட்டில் உள்ள இயற்கைப் பொருளே நமது முகத்திற்கு பேரழகை கொடுக்கும்.

ஆகவே இந்த முகத்தை வெள்ளையாக மாற்றுவதற்கு ஒரு ஃபேஸ் மாஸ்க் பற்றி பார்ப்போம்.

முகத்தை ஜொலிக்க வைக்க தேவையான பொருட்கள்:

முள்ளங்கி -1/2
தயிர்- ஒரு டேபிள் ஸ்பூன்
சிவப்பு சந்தன பவுடர் – ஒரு டேபிள் ஸ்பூன்
உருளைக்கிழங்கு-1

செய்முறை விளக்கம்:
முதலில் தட்டை வடிவில் கொண்ட பலகையினை எடுத்துக் கொள்ளவும்.

அந்தப் பலகையில் உருளைக்கிழங்கை இரண்டு பாதியாக வெட்டி ஒரு பகுதியை எடுத்து கொள்ளவும்.

அந்த ஒரு பகுதியை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

அடுத்ததாக அரைமுள்ளங்கியின் தோல்களை சீவி எடுத்து சிறிய துண்டாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

அதன்பிறகு மிக்ஸி ஜாரில் நறுக்கி வைத்துள்ள உருளை மற்றும் முள்ளங்கியைச் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

அடுத்து தனியாக ஒரு பவுலில் அரைத்து வைத்துள்ளதை வைத்துக் கொள்ளவும் .

இவற்றில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு தயிரை சேர்த்துக் கொள்ளவும்.

தயிர் சேர்த்த பிறகு சிவப்பு சந்தன பவுடர் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு சேர்க்கவும் இப்போது மூன்றையும் நன்றாக மிக்ஸ் செய்யவும்.

சூப்பரான முக சருமத்தை பாதுகாக்கும் பேஸ் மாஸ்க் தயார்.
இதனை அப்படியே முகத்தில் நன்றாக அப்ளை செய்யவும்.

முகத்தில் தடவி 5 நிமிடம் வரை ஊற விடவும்.

ஐந்து நிமிடம் ஆன பிறகு முகத்திலுள்ளதை கழுவி கொள்ளலாம். இந்த ஃபேஸ் மாஸ்க்கை கண்டிப்பாக செய்து பாருகங்கள் நல்ல மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.

Leave a Reply