குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்த 5 பேர் இன்று விடுதலை!

0

யாழில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்த 5 பேர் இன்றையதினம் யாழ்.நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்யப்பட்ட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

இதற்கமைய அச்சுவேலி, இளவாலை,கோப்பாய் மற்றும் கிளிநொச்சி ஆகிய பொலிஸ் நிலையப் பகுதிகளைச் சேர்ந்த 5 சந்தேக நபர்கள் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் பயங்கரவாத தடுப்புகாவற்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அத்துடன் குறித்த நபர்களை யாழ்ப்பாண நீதவான் முன்னிலையில் பயங்கரவாதத் தடுப்பு காவற்துறையினரால் முன்னிலைப் படுத்தப்பட்டுள்ளனர்.

இதன் போது குறித்த ஐந்து பேர் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லாத காரணத்தினால் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

Leave a Reply