பெண்கள் ஒவ்வொருவரும் அதிகமாக சந்திக்கக் கூடிய ஒரு பிரச்சனை தான் இந்த கருவளையம்.
இந்த பிரச்சனையை பலவகையான காரணங்களினால் ஏற்படுகின்றது.
குறிப்பாக அதிக வேலைச் சுமையினால் போதுமான தூக்கம் கிடைக்காததால், கண்களைச் சுற்றி கருப்பான வளையங்கள் உருவாகின்றன.
இந்த கருவளையம் வந்து விட்டால் முக அழகு பொலிவு இழந்து காணப்படும் என்பதுடன் வயதான தோற்றத்தை ஏற்படுத்தும்.
இந்த கருவளையம் உடனே மறைய என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம்.
அந்தவகையில் கருவளையம் உடனே மறைய இதைவிட சிறந்த வழிகள் எதுவும் இல்லை அதாவது உருளைக்கிழங்கு சாறு.
உருளைக்கிழங்கை நன்றாக அரைத்து அதிலிருந்து சாற்றினை தனியாக வடிகட்டிக்கொள்ளவும்.
பின்பு ஒரு காட்டன் துணியை எடுத்துக் கொள்ளவும்.
அந்தத் துணியை உருளைக்கிழங்கு சாற்றில் நனைத்து கருவளையம் உள்ள இடத்தில் தடவி பத்து நிமிடம் வரை ஊற வைத்து பின்பு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து செய்து வர கண்களைச் சுற்றியுள்ள கருவளையம் மறைந்துவிடும்.