மீண்டும் தீப்பற்றி எரிந்த கப்பலின் கழிவுகள்!

0

இலங்கை கடற்பரப்பில் நங்கூரம் இடப்பட்டிருந்த நிலையில் தீப்பற்றி எரிந்த எக்ஸ்பிரஸ் பெரல் கப்பலிலிருந்து சில கழிவுப் பொருட்கள் கரையொதுங்கியுள்ளன.

இதற்கமைய குறித்த கழிவு பொருட்கள் இன்று காலை இரத்மலானை, மொரட்டுவ மற்றும் அங்குள்ள கடற்கரையில் கரை ஒதுங்கியிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் நாட்டில் தற்போது நிலவும் காற்றுடன் கூடிய காலநிலையால் குறித்த கழிவு பொருட்கள் மீண்டும் கரையொதுங்க ஆரம்பித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த பகுதியில் கரையொதுங்கியுள்ள பிளாஸ்டிக் பைகளும் அங்குளன காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு கடலோர பாதுகாப்பு துறைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply