தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு.

0

மக்களின் பாதுகாப்பு கருதி தற்போது நாடு பூராகவும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைய கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 266 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அத்துடன் மாகாண எல்லைகளை கடந்தமை மற்றும் முகக்கவம் அணியாமை போன்ற விதிகளை மீறியமை தொடர்பில் குறித்த அனைவரும் கைது செயப்படுள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 48,808 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply