நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை.

0

நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் இன்று இடியுடன் மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதற்கமைய நாட்டில் இன்றும் நாளையும் மேல், சப்ரகமுவ,வடமேல் ,தென் மற்றும் மத்திய மாகாணங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன் மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

அவ்வாறு ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீட்டர் வரை அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

வடக்கு வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது 50 கிலோ மீட்டர் வரை அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

ஆகவே பொது மக்கள் அனைவரும் இடியுடன் உடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Leave a Reply