நாட்டில் மேலும் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
இதற்கமைய இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராமசேவகர் பிரிவுகளே தனிமைப் படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மன்னார், கேகாலை ஆகிய மாவட்டங்களிலுள்ள 4 கிராமசேவகர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப் படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது,
அத்துடன் களுத்துறை மாவட்டத்தின் அகலவத்தை காவல்துறை பிரிவிற்குட்பட்ட ககுலந்தல தெற்கு கிராம சேவகர் பிரிவின் பிம்புருவத்தை பகுதி இன்று அதிகாலை 6 மணி முதல் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



