53 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்கள் மீண்டும் விளக்கமறியலில்.

0

சுமார் 53 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போன்ற போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட களுத்துறை தெற்கு உப காவல்துறை பரிசோதகர் உள்ளிட்ட 3 பேர் எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய குறித்த சந்தேக நபர்களை இன்று காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தத்திய போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த போதைப் பொருள் கடத்தலின் பின்னணியில் வெளிநாட்டு தொடர்பு இருக்கக்கூடும் என சந்தேகிப்பதால் சந்தேக நபர்களை தொடர்ந்து விளக்கமறியலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி வழங்குமாறு போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் நீதிமன்றில் கோரியிருந்தனர்.

இதன் பிரகாரம் குறித்த சந்தேக நபர்களை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply