தமிழில் (கால்தான் )படம் மூலம் அறிமுகமான நடிகை ராஷ்மிகா மந்தனா, தெலுங்கில் குறுகிய காலத்திற்குள் மகேஷ் பாபு, நாகர்ஜுனா, நானி, விஜய் தேவரகொண்டா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து தற்போது மிகவும் பிரபல்யம் வாய்ந்த நடிகையாகி விட்டார்.
இவற்றை விட இவர் பாலிவுட்டிலும் மூன்று படங்களில் நடித்து வருகின்றார்.
அத்துடன் தமிழ்,தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பிரபலமான நடிகையாக வலம்வரும் ராஷ்மிகா, சமூக வலைத்தளங்கள் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாட வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த வகையில் சமீபத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய ராஷ்மிகா ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார்.
குறிப்பாக ரசிகர் ஒருவர் ராஷ்மிகா விடம் நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் பிடிப்பார்கள் என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த ராஷ்மிகா நான் சிகரெட் பிடிப்பதே இல்லை.
அதேபோல் சிகரெட் பிடிப்பவர்கள் பக்கமும் நான் செல்ல மாட்டேன் என்று பதில் அளித்தார்.