நாளுக்கு நாள் கொவிட் தொற்றின் வீரியம் அதிகரித்து வரும் நிலையில் யாழ் மாவட்டத்தில் நேற்றைய தினம் மேலும் 55 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இவ்வாறு தொற்று உறுதியானவர்களில் 16 பேர் சிறுவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர்களில் பிறந்தது 5 நாட்களேயான சிசுவும் அடங்கியுள்ளதாக சுகாதாரப் பிரிவு குறிப்பிடுள்ளது.
அத்துடன் யாழ் போதனா வைத்தியசாலையில் நேற்று 288 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் 65 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி யாழ் மாநகரசபை எல்லைக்குள் 16 சிறுவர்கள் உட்பட 55 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இது தவிர போதனா வைத்தியசாலையில் பிறந்து ஐந்து நாட்களேயான சிசுவிற்கும் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.