சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது விட்டால் பாரிய ஆபத்து.

0

நாட்டிலுள்ள அனைத்து பொதுமக்களும் இரண்டு தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டாலும் சுகாதார வழிகாட்டல்களை உரிய முறையில் பின்பற்ற வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய குறித்த விடயம் கொழும்பில் தொடர்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.

தற்போது நோயாளர்கள் குறைவாக பதிவாகுவதால் ஆபத்து இல்லை என்ற அடிப்படையில் செயற்பட முடியாது.

இந்நிலையில் தொடர்ந்தும் 1500முதல் 2000 வரையில் நோயாளர்கள் பதிவாகும் நிலையில் டெல்டா திரிபு தொற்றியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு எதிர்காலத்தில் வேறு திரிபுகளும் ஏற்படலாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply