மருத்துவத்துறை சார் 14 தொழிற்சங்கங்கள் இன்று முதல் பணிப் புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுப்பு

0

இலங்கை நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியம் உட்பட மருத்துவத்துறை சார் 14 தொழிற்சங்கங்கள் இன்று முதல் பணிப் புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமாகான பதவி உயர்வு உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து குறித்த சங்கத்தினரால் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இன்று காலை 8 மணி முதல் இந்த புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக நிறைவுகான் மருத்துவ தொழில் வல்லுணர் ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த போராட்டமானது நாட்டிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும் சில வைத்திய சாலைகளில் அவசர மற்றும் அத்தியாவசிய சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக நிறைவு காண் மருத்துவத் தொழில் வல்லுணர் ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply