ஆட்பதிவு திணைக்களம் ஜூலை 5ஆம் திகதி முதல் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளுக்காக மீள திறக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த தகவலை ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க இன்று அறிக்கையொன்றை வெளியிட்டு குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன் குறித்த சேவையை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு திகதியையும், நேரத்தையும் ஒதுக்கி கொண்டவர்கள் மாத்திரமே பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பத்தரமுல்லையில் உள்ள தலைமை அலுவலகத்தில் சேவை பெற்றுக் கொள்ள எதிர்பார்ப்போர், 0115 226 126, அல்லது 0115 226 100 என்ற இலக்கத்தினூடாக தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு வடமாகாண காரியாலயத்தில் சேவையை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்போர் 0242 227 201 என்ற இலக்கத்திற்கும் கிழக்கு மாகாண காரியாலயத்தை 0652 228 449 என்ற இலக்கத்திற்கு தொடர்பினை ஏற்படுத்த முடியும்.
மேலும் தென் மாகாண காரியாலயத்தில் சேவை பெற விரும்புவோர் 0912 228 348 என்ற இலக்கத்திற்கும் வடமேல் மாகாணத்தில் சேவை பெற விரும்புவோர் 0372 224 337 என்ற இலக்கத்திற்கு தொடர்பு ஏற்படுத்தி உரிய தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என ஆட்பதிவு திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது.



