யாழ்ப்பாணம் – புங்குடுதீவு – நடுத் துருக்கி கடற்கரையில் கடலாமையொன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.
இவ்வாறு உயிரிழந்துள்ள கடலாமை 3 அடி நீளமும் 2.2 அடி அகலமும் கொண்டதாக காணப்படுகின்றது.
இறந்த நிலையில் காணப்படும் கடல் ஆமையை அவதானித்த மீனவர்கள் அது தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் வழங்கியிருந்தனர்.
இதனையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் உடற்கூற்று பரிசோதனைக்காக உயரிழந்த கடல் ஆமையின் உடலை எடுத்துச்சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



