இந்தியாவில் சடுதியாக அதிகரித்து வரும் கொவிட் தொற்று.

0

இந்தியாவில் தற்போது நிலவும் கொவிட் நிலைமை குறித்து மத்திய சுகாதார அமைச்சகத்தினால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த அறிக்கையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 46,617 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த தொற்றால் ஏற்பட்ட மொத்த பாதிப்பு 3,04,58,251 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் நாடு பூராகவும் ஒரே நாளில் மாத்திரம் 853 பேர் இந்த கொவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய இதுவரை காலமும் இந்தியாவில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,00,312 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேறைய தினத்தில் மாத்திரம் 59,384 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்து சென்றவர்களின் மொத்த எண்ணிக்கை 2,95,48,302 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன் நாடு முழுவதிலுமுள்ள மருத்துவமனைகளில் 5,09,637 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply