மாகாணங்களுக்கு இடையில் தேவையற்ற பயணங்களை மேற்கொள்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை.

0

தற்போது மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை கட்டாயமாக அமுல்படுத்தப்பட்டு வருவதாக சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய குறித்த விடயம் தொடர்பில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறு மாகாண எல்லைகளை கடக்க முயற்சிக்கும் வாகனங்கள் தொடர்ச்சியாக திருப்பி அனுப்பப்படுகின்றன .

அத்துடன் அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கு மாத்திரமே மாகாணங்களுக்கிடையில் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மாகாணங்களுக்கு இடையிலான தேவையற்ற பயணங்களை மேற்கொள்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென என்றும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply