தாதியர்களின் தொழிற்சங்க நடவடிக்கையினால் பெரும் அசௌகரியங்களை எதிர் நோக்கிய நோயாளர்கள்.

0

பதவி உயர்வு மற்றும் தாதியர் யாப்பில் மாற்றங்களை ஏற்படுத்துதல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து தாதியர்களும் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

பல வைத்தியசாலைகளின் பணிகள் குறித்த செயற்பாட்டின் காரணத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.

இருப்பினும் கொவிட் வைத்தியசாலைகள், சிகிச்சை மையங்கள் மற்றும் விசேட வைத்திய சாலைகள் போன்றவற்றில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் மாட்டாது என அரச தாதிய உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவசர மற்றும் அத்தியாவசிய சேவைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறித்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக சில வைத்தியசாலைகளின் பணிகளில் பாதிக்கப்பட்டுள்ளதால் நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply