இலங்கை பொது மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை.

0

இந்திய கொவிட் திரிபான டெல்டா திரிபு தொடர்பில் எதிர்வரும் நாட்களில் பொதுமக்கள் அனைவரும் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் பொது மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இதற்கமைய நாட்டில் தற்போது பயணத் தடை நீக்கப்பட்டாலும் கூட பொது மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் டெல்டா திரிபானதுஅதிக மரணங்களை ஏற்படுத்தியிருந்தது.

சமூகத்தில் டெல்டா திரிபு பரவல் தொடர்பில் மக்கள் மிகுந்த எச்சரிக்கை கொள்ள வேண்டும் என்பதுடன் சுகாதார விதிமுறைகளையும் சரியான முறையில் கடைபிடிக்க வேண்டும்.

இருப்பினும் சிலர் முகக் கவசங்கள் இன்றி தற்போதும் பயணிப்பதை எம்மால் அவதானிக்க முடிகிறது.

இவ்வாறான விடயங்களை தவிர்த்து சரியான முறையில் பொதுமக்கள் அனைவரும் செயற்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply