நண்பர்களை கடத்திச் சென்று சித்திரவதை செய்த மந்திரவாதிக்கு நேர்ந்த கதி.

0

கண்டி -பலகொல்ல பகுதியில் இருவரை கடத்திச் சென்று சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் மந்திரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கமைய 32 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் பல்லேகல பகுதியில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த கடத்தல் சம்பவம் தொடர்பில் இதுவரை 11 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply