தமிழகத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு-கூடுதலாக 100 பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த தீர்மானம்.

0

தமிழகத்தில் கொவிட் தொற்றுப் பரவல் குறைவடைந்து வருவதால் 11 மாவட்டங்கள் தவிரந்த ஏனைய மாவட்டங்களில் போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கொவிட் விதிமுறைகளை பின்பற்றி கடந்த 28ஆம் திகதி முதல் 50 சதவீத பயணிகளுடன் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

அத்துடன் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதுவரையில் 300 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பதால் வரும் நாட்களில் கூடுதலாக 100 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் இன்று முதல் முழு வீச்சில் இயக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply