குங்குமத்தை பெண்கள் எங்கு வைத்தால் என்ன நன்மை கிடைக்கும்? குங்கும வசியம் தெரியுமா?

0

சுமங்கலிப் பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள்.

அம்பிகையின் வகிட்டில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு ஷேமத்தைக் கொடுக்கும். வகிட்டு குங்குமத்தில் மகாலட்சுமி குடி கொள்வாள். நெற்றித்திலகம் லட்சுமிகரமானது என்பர். எனவே குங்குமம் வைக்கும் போது ‘ஸ்ரீயை நமஹ’ என்றோ ‘மகாலட்சுமியே போற்றி’ என்றோ சொல்லியபடி வைத்துக்கொள்வது பெண்களுக்கு நலம் பயக்கும். வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது தருபவர், பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும்.

குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளைத் தோற்றுவிக்கும். குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம். பெண்கள் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும். அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும். திருமண புடவை அரக்கு நிறத்தில் இருப்பது நல்லது.

தெய்வீகத்தன்மை, மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும். ஆண்கள் இரு புருவங்களையும் இணைத்தாற்போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும். கட்டைவிரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த துணிவைக் கொடுக்கும்.

குரு விரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம் அணிவது முன்னணித்தன்மை நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும். சனி விரலால் (நடுவிரல்) குங்குமம் இட்டுக் கொள்வது தீர்க்காயுளைக் கொடுக்கும்.

குங்குமம் அணிவது தெய்வீக தன்மை. உடல் குளிர்ச்சி மற்றும் சுயக் கட்டுபாட்டிற்கு நல்லது. மனித உடலில் தெய்வ சக்தி வாய்ந்த நெற்றிக்கண் அதாவது இரண்டு புருவங்களுக்கு நடுவிலுள்ள பகுதியில் குங்குமத்தை வைத்தால் அமைதி கிடைக்கும். ஹிப்னாட்டிஸம் உட்பட எந்த சக்தியையும் முறியடிக்கும் சக்தி குங்குமத்திற்கு உண்டு. உடலிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகள் எடுத்து செல்லும் உஷ்ணத்தை கட்டுப்படுத்துவது நெற்றிப் பகுதியே ஆகும். இந்த பகுதியில் குங்குமத்தை வைப்பதால் உஷ்ணம் குறையும்.

இதனால் தான் நம் வீட்டுப் பெண்கள், பெரியோர்கள் குங்குமம் வைப்பதைக் கட்டாயமாக வைத்திருக்கிறார்கள்.- Source: timestamil


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply