லிட்ரோ நிறுவனம் விடுத்த விசேட அறிவிப்பு..!!

0

தற்போது நாட்டில் அதிக தேவை உள்ள பகுதிகளுக்கு மாத்திரம் முன்னுரிமை அளித்து சமையல் எரிவாயுவை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் நேற்றைய தினம் நாட்டை வந்தடைந்த கப்பல் மூலம் கொண்டுவரப்பட்ட 1,400 மெட்ரிக் தொன் எரிவாயு விநியோகிக்கும் செயற்பாடுகள் இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளன.

அத்துடன் அதிக தேவை உள்ள பகுதிகளுக்கு முன்னுரிமை அளித்து சமையல் எரிவாயு விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

கப்பலிலிருந்து எரிவாயு இறக்கும் பணி நேற்று இரவு நடைபெற்றது. இந்த மாதம் கோரப்பட்டுள்ள மேலும் இரண்டு எரிவாயு தாங்கி கப்பல்கள் இலங்கைக்கு வர உள்ளன.

இந்த கப்பல்கள் பெரும்பாலும் எதிர்வரும் 24 மற்றும் 26ஆம் திகதிகளில் இலங்கையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அவற்றின் மூலம் மொத்தமாக 8,500 மெட்ரிக் தொன் எரிவாயு கொண்டுவரப்படவுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply