எதிர்வரும் 7ஆம் திகதி பாடசாலைகள் மீளத் திறக்கப்படவுள்ளன.
இந்நிலையில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்சாரத்தடை காரணத்தால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் மாணவர்களுக்கு பிரச்சனை ஏற்படாத வண்ணம் அரசாங்கம் ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.



