இலங்கைக்கு களம் இறங்கும் இந்தியா!

0

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

இந்நிலையில் இலங்கையில் செயற்படும் இந்திய எரிபொருள் நிறுவனமான “இந்தியன் ஒயில் கோப்ரேசன்” இலங்கைக்கு எரிபொருட்களை விநியோகிக்கவுள்ளது.

இதன்படி இலங்கைக்கு எதிர்வரும் 4 முதல் 5 மாதங்களுக்கு இந்திய நிறுவனம் எரிபொருட்களை விநியோகிக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

இவற்றுள் ,பெற்றோல், டீசல் மற்றும் ஜெட் எரிபொருட்கள் உள்ளடங்கவுள்ளன.

இந்த விடயம் குறித்து இந்திய நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக ரொயட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள 500 மில்லியன் கடன் திட்டத்தின்கீழ் இந்த எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இலங்கையில் செயற்படும் லங்கா ஐஓசி நிறுவனம் தமது எரிபொருட்களுக்கான விலையை ஏற்கனவே அதிகரித்துள்ளது.

எனினும் இலங்கை பெற்றோலியக்கூட்டுத்தாபனம் இன்னும் அதிகரிப்பை மேற்கொள்ளவில்லை.

இந்திய நிறுவனத்தின் விநியோகத்தின் பின்னர் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விலையிலும் மாற்றம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply