நாட்டில் தற்போது கொவிட் தொற்றால் பாதிக்கப்படு மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் இலங்கையில் உள்ள எந்தவொரு கல்லறை அல்லது புதைகுழியிலும் கோவிட் தொற்றால் உயிரழந்தவர்களை புதைக்க அனுமதிக்கும் புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும் எதிர்வரும் 5ம் திகதியின் பின்னர் கோவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடலை அனைத்து மையவாடிகள், சேமக்காலைகள் மற்றும் மயானங்களில் அடக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.