இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்.

0

நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் வடக்கு,வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்றைய தினம் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

அத்துடன் குறித்த பகுதிகளில் சில இடங்களில் 100 மில்லி மீட்டர் அளவில் பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் தென் மற்றும் மத்திய ஊவா மாகாணங்களிலும் இரத்தினபுரி மாவட்டத்தில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மேலும் தென்மேற்கு பகுதியில் கரையோர பகுதிகளில் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்யும்.

ஆகவே பொதுமக்கள் அனைவரும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Leave a Reply