தமிழகத்தின் கச்சதீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் விபத்து இடம்பெற்றது.
இதன் பிரகாரம் மீனவர்களின் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 7 மீனவர்கள் கடலில் விழுந்து தத்தளித்தனர்.
அதன்போது வேறு படகில் இருந்த சக மீனவர்கள் அவர்களை விட்டு கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
மேலும் கச்சதீவு அருகே எல்லை தாண்டிய தால் இலங்கை கடற்கரையில் ரோந்து கப்பல் மீனவர்களின் படகு மீது மோதியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



