கடந்த சில நாட்களாக நாட்டில் நிலவும் கடும் மழையுடனான வானிலை காரணத்தால் கிளிநொச்சி மாவட்டத்தின் பாரம்பரிய நீர்ப்பாசன குளமான இரணைமடு குளத்தின் வாய்க்கால் கட்டுமான பணிகள் சில இடங்களில் இடிந்து வீழ்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய கடந்த 2015 ஆம் ஆண்டு, பாதீட்டின் கீழ் வாய்க்கால் கட்டுமான பணிகள் புனரமைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் கிளிநொச்சி இரணைமடு குளத்தில் இருந்து ஊரியான் பன்னங்கண்டி ஆகிய பகுதி விவசாய நிலங்களுக்கான நீர் விநியோகம் செய்யும் வாய்க்காலின் கட்டுமானமே இவ்வாறு இடிந்து வீழ்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



