வவுனியா மாவட்ட மக்களுக்கு இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அவசர அறிவிப்பு.

0

வவுனியா மாவட்டத்தில் நாளைய தினம் மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் வினியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காகவே குறித்த மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நாளை காலை 8.30 மணியில் இருந்து மாலை 5 மணிவரையில் குறித்த மின்சார தடை அமுலில் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி வவுனியா மாவட்டத்தின் குருக்கள் புதுக்குளம், மணியர் குலம் ஆகிய பிரதேசங்களிலே குறித்த மின் விநியோகம் தடைப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

Leave a Reply