51ஆவது ஆளுநர்கள் மாநாடு இன்று.

0

தமிழகத்தில் 51ஆவது ஆளுநர்கள் மாநாடு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் இன்று டெல்லியில் ஆரம்பமானது.

இதற்கமைய டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்றுவரும் மாநாட்டில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு , பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் இன்று நாம் நீண்ட இடைவெளிக்கு பின்னர் சுமார் இரண்டு ஆண்டுகள் கழித்து ஆலோசனை நடத்துகின்றோம் என்றும் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கொவிட் தொற்று நோயை எதிர்த்துப் போராட கொவிட் எதிர்ப்பு போர் வீரர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றினர்.

தற்போது வரை இந்தியாவில் 108 கோடிக்கும் அதிகமான கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

மேலும் நாடு பூராகவும் தடுப்பூசி பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது என்றும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply