எதிர்வரும் வார இறுதி நாட்களில் கொழும்பின் பல பிரதேசங்களுக்கு 28 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
இதற்கமைய நவம்பர் மாதத்தின் 13ஆம் திகதி சனிக்கிழமை இரவு 8 மணி தொடக்கம் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை குறித்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொழும்பு 4,5,6, 7, 8 மற்றும் கோட்டை , கடுவலை மாநகர சபை அதிகார பிரிவு, மஹரகம மற்றும் பொரஸ்கமுவ நகரசபை அதிகாரப்பிரிவு ஆகிய பகுதிகளில் இந்த நீர் விநியோகம் தடைப்படும்.
மேலும் அம்பத்தலையிலிருந்து கோட்டை நீர் தடாகத்திற்கு நீரை விநியோகிக்கும் பிரதான குழாயில் மேற்கொள்ளப்படும் அவசர திருத்த வேலை காரணமாக குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



