இப்பொழுது மார்க்கெட்டில் எவ்வளவோ சரும பராமரிப்பு கிரீம்கள் வந்தாலும் , இயற்கையாக நாம்
உண்ணும் காய்கறிகள் மற்றும் பழங்களை உபயோகித்து
நமது சருமத்தை பராமரிக்கலாம்.
எப்பொழுதுமே இயற்கைவழி செல்லும்போது நன்மை அதிகம்தான் இல்லையா?
நமது அடுப்படியில் நாம் உபயோகிக்கும் ஒவ்வொரு பொருளிலுமே ஒரு அழகுகுறிப்பு சொல்லலாம்.
இந்த வாரம் முட்டைகோஸ் நமக்கு எவ்விதம் உதவும்
என்று பார்க்கலாம்.
முட்டைகோஸ் சருமத்திற்கு நிறத்தை தந்து ,பொலிவைத்தரும்.
முட்டைகோஸ் இதழ் இரண்டு எடுத்து , நன்கு மசித்து
1/4 sp தேன் கலந்து -கண்களில் இருந்து சிறிது தள்ளி
முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தேய்த்து -சிறிது நேரம் காயவிடுங்கள்.
பின் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் போதுமானது.
வாரம் ஒருமுறை இதை செய்யலாம்.
முகத்தில் கரும்புள்ளி பிரச்சினை உள்ளவர்கள்
தேவையான அளவு நீரில் முட்டைகோஸ் இதழ் இரண்டு சேர்த்து கொதிக்கவிட்டு , அந்தநீரில்
முகத்தை ஆவி பிடிக்க வேண்டும்.
நாளடைவில் கரும்புள்ளி ,மற்றும் பொலிவிழந்த சருமம் பளபளக்க காண்பீர்கள்.