நாளைய தினம் முதல் கா. பொ. த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு தடுப்பூசி!

0

இந்த வருடம் கா. பொ. த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் மற்றும் ஒரு தடவை மாத்திரம் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கும் பைசர் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாளைய தினம் முதல் கொழும்பில் உள்ள அனைத்து கல்வி வலயங்களிலும் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு இந்த தடுப்பூசியை செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆகவே இந்த வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர் கள் தங்களுக்குரிய தேசிய அடையாள அட்டையை சமர்ப்பித்து உரிய தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளுமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Leave a Reply