பசில் ராஜபக்சவுக்கு மற்றுமொரு உயர் பதவி கிடைத்துள்ளதாக தகவல் வெளிஇயக்கியுள்ளது.
இதற்கமைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற குழுத் தலைவராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்ஷ அண்மையில், தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட துடன் நிதி அமைச்சராகவும் பதவியேற்றார்.
இந்நிலையில் பசில் ராஜபக்ஷவை பொதுஜன பெரமுனவின் நாடளுமன்றத் தலைவராக நியமிக்குமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் பசில் ராஜபக்சவை நாடாளுமன்றக் குழுத் தலைவராக அங்கீகரிக்கும் அறிவிப்பை சபாநாயகர் விரைவில் வெளியிடுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.



