இன்று முதல் சிறை கைதிகளுக்கும் தடுப்பூசிகள்!

0

சிறை கைதிகளுக்கும் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடக பேச்சாளரும் ஆணையாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய குறித்த கைதிகளுக்கு இன்று முதல் சைனோபார்ம் தடுப்பூசிகளை வழகுங்கும் செயற்பாடுகள் கொழும்பிலுள்ள சிறைச்சாலைகளில் ஆரம்பமாகின.

அத்துடன் வெலிக்கடை, மெகசின் மற்றும் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை களில் தடுத்து வைக்கப்பட்டுவர்களுக்கு இந்தத் தடுப்பூசிகள் செலுத்தும் செயற்பாடுகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன.

மேலும் நாட்டிலுள்ள ஏனைய அனைத்து சிறைச்சாலைகளிலுள்ள சிறை கைதிகளுக்கும் இந்த தடுப்பூசிகளை செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply