ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்ட இலங்கை வீரர்களது உத்தியோகபூர்வ ஆடை தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இலங்கையின் ஒலிம்பிக் குழாமிடம் அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளார்.
இந்நிலையில் ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள சென்றிருந்த இலங்கை வீரர் ஒருவர் தனது போட்டி இலக்கத்தை தனது ஆடையில் ஒட்டி இருந்த விதம் தொடர்பாக அண்மையில் பாரிய சர்ச்சை ஏற்பட்டிருந்தது.
அத்துடன் குறித்த விடயம் இன்று நாடாளுமன்றத்தில் எழுதப்பட்டது.
இதற்கு பதில் வழங்கிய அமைச்சர் நாமல் ராஜபக்ச இந்த விடயம் குறித்து தாம் இலங்கை ஒலிம்பிக் குழுமத்திடம் அறிக்கை கோரி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வீரர்களது ஒழுக்க விதிகள் குறித்த ஏற்பாடுகள் இல்லாத நிலையில் அதனை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



