பத்தாயிரம் ரூபா அபராதமும் ஆறு மாத காலம் சிறை தண்டனையும்!

0

முகக் கவசம் அணியாதவர்களை கைது செய்வதற்கு இன்று முதல் விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பிரதிக் காவற்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய கொழும்பில் பல்வேறு சன நெரிசல் நிறைந்த பகுதிகளில் பொதுமக்கள் முகக்கவசம் இன்றி நடமாடுவதாக புலனாய்வு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் முக கவசம் இன்றி வெளியில் பொதுவாக செயற்படுவது தனிப்படுத்தல் சட்டத்தின் அடிப்படையில் குற்றம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த குற்றங்கள் நிரூபிக்கப்படும் ஒவ்வொருவருக்கும் பத்தாயிரம் ரூபா அபராதமும் ஆறு மாத காலம் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

ஆகவே முக கவசம் அணியாது சன நெரிசல் மற்றும் பொது வெளியில் நடமாடுபவர்களை கைது செய்வதற்கு விசேட காவல்துறை குழுக்கள் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply