கொழும்பிலே அதிகளவான டெல்டா தொற்றாளர்கள் அடையாளம்!

0

நாட்டில் தற்போது டெல்டா தொற்றுடன் அடையாளங் காணப்பட்ட 18 நபர்களில் 11 பேர் கொழும்பில் அடையாளங் காணப்பட்டிருப்பதாக, கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி வைத்தியர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இவர்களுள் ஐந்து பேர் கெத்தாராம விளையாட்டரங்கில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டவர்கள் ஆவர்.

ஏனைய இரண்டு பேர் தெமட்ட கொடையிலும் இரண்டு நபர்கள் வட கொழும்பில் உள்ளவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் யாழ்ப்பாணம் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலும் குறித்த டெல்டா திரிபுடன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

மேலும் நாட்டின் டெல்டா திரிபுடன் கூடிய 36 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply