15 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய மேலும் நான்கு சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய நாவலப்பிட்டி காவல்துறையின் சிறுவர் மற்றும் மகளிருக்கான பணியகதினால் குறித்த விசாரணை முன்னெடுக்கபட்டு வருகின்றது.
அத்துடன் குறித்த சந்தேக நபர்கள் தொடர்பிலான விபரங்கள் தற்போது கிடைக்கப் பெற்றதாகவும் நாவலப்பிட்டி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அந்த சிறுமி சந்தேக நபர்களின் ஆள் அடையாளம் குறித்த விபரங்கள் தொடர்பில் முழுமையாக அறிந்திருக்கவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வாறு குறித்த சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் இடத்தில் நேற்றைய தினம் காவல்துறையினர் ஆய்வினை மேற்கொண்டிருந்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட அந்த சிறுமியின் தந்தைய உள்ளிட்ட 6 பேரும் இந்த மாதம் 26ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.