எதிர்வரும் 21ஆம் திகதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்கம்!

0

தென்மேற்கு பருவமழை காரணத்தினால் தமிழகத்தில் கன மழை பெய்து வருகின்றது.

இதற்கமைய கடந்த 3 நாட்களாக சென்னையில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது.

இதனால் மண்ணின் ஈரப்பதம் ஏற்பட்டு குளிர்ந்த காற்று வீசுகின்றது.

அத்துடன் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் மழையால் ஏரி, குளங்களிலும் நீர் வரத்து அதிகரித்து காணப்படுகின்றது.

அவ்வாறு மேலும் இரு நாட்களுக்கு சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்வதற்கான சந்தர்ப்பம் உள்ளததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வடமேற்கு வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி எதிர்வரும் 21ஆம் திகதி உருவாகிறது.

இதனால் கேரளா கர்நாடகா மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதேநேரத்தில் தமிழகத்தில் படிப்படியாக மழை குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் சென்னையில் நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்து வருகிற நிலையில் இந்நகரின் பல்வேறு இடங்களிலும் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

புறநகர் பகுதிகளில் குறித்த மழை நீடித்த வண்ணம் காணப்படுகின்றது.

மேலும் ஒரு சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்துள்ளதுடன் மின்சாரம் தடைபட்டு காணப்படுகின்றது.

தொடர்ந்து மூன்று நாட்கள் மாலை நேரங்களில் மழை பெய்து வருவதால் சென்னை வாசிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply