தொலைபேசி மற்றும் இணைய கட்டண அதிகரிப்புக்கு அனுமதி மறுப்பு.

0

தொலைபேசி மற்றும் இணைய கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து இதற்கான கட்டணங்களுக்கு அனுமதி பெறப்படவில்லை என தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரிக்கு அமைய, நேற்று (05.10.2022) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தமது கட்டணங்களை மீண்டும் அதிகரிக்க அனைத்து தொலைதொடர்பு சேவை வழங்கல் நிறுவனங்களும் தீர்மானித்திருந்தன.

இதன்படி புதிய வரி 2.5% ஐ சேர்க்கும்போது, தொலைக்காட்சி சேவைகள், முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு கட்டணங்கள் திருத்தப்பட்டுவதாக நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இந்நிலையில், இந்த கட்டண உயர்வுகள் தொடர்பில் இதுவரை எவ்வித அனுமதியும் பெறப்படவில்லை என தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Leave a Reply