இந்தியாவில் புதிதாக 2,529 பேருக்கு கொரோனா.

0

கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது.

அதில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,529 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. நேற்று முன்தினம் பாதிப்பு 1,968 ஆக இருந்தது.

நேற்று 2,468 ஆக உயர்ந்த நிலையில் இன்று 2-வது நாளாக பாதிப்பு அதிகரித்துள்ளது.

மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 4 ஆயிரத்து 463 ஆக உயர்ந்தது.

கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 3,553 பேர் நேற்று குணமாகி உள்ளனர்.

இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 40 லட்சத்து 43 ஆயிரத்து 436 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 32,282 ஆக உள்ளது.

இது நேற்றை விட 1,036 குறைவாகும். தொற்று பாதிப்பால் கேரளாவில் விடுபட்ட 8 மரணங்கள் உள்பட மேலும் 12 பேர் இறந்துள்ளனர்.

மொத்த பலி எண்ணிக்கை 5,28,745 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply