கேரளாவில் அரசு பேருந்துடன் பள்ளி சுற்றுலா பேருந்து மோதி பயங்கர விபத்து.

0

கேரளா மாநிலம் பாலக்காட்டில் உள்ள வடக்கஞ்சேரி அருகே மங்கலத்தில் மாணவர்களை ஏற்றிச் சென்ற சுற்றுலா அரசு பேருந்து மீது பயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.

மேலும்,38 பேர் காயமடைந்தனர். எர்ணாகுளத்தில் இருந்து தனியார் பள்ளி பேருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு உதகைக்கு சுற்றுலா சென்றது. அப்போது கோவை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் உயிரிழந்தவர்களில் 5 பேர் மாணவர்கள் என்றும் 4 பேர் அரசு பேருந்தில் பயணம் செய்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

படுகாயமடைந்த 38 பேருக்கு திருச்சூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply