கடந்த 27 ஆண்டுகளாக குஜராத் மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பா.ஜ.க. ஆட்சியில் குஜராத்தில் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், ஊழல் அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
மேலும், பா.ஜ.க. ஆட்சியில் குஜராத்தில் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், ஊழல் அதிகரித்து வருவதை கண்டித்து காங்கிரஸ் சார்பில் மாநிலம் முழுவதும் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணி முதல் 12 மணி வரை முழு அடைப்புக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.
வணிகர்கள், ஆட்டோ சங்கங்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தரும்படி காங்கிரஸ் மாநில தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்