கருவளையம் நீங்க பாட்டி வைத்தியம்..!!

0

முதலில் இரவில் நன்கு தூங்குவது நல்லது. தூங்கும் போது கண்களில் இறுக்கமாக மூடி தூங்காமல் லேசாக மூடிக்கொண்டு தூங்குவது நல்லது.

அதேபோல் கண்களுக்கு அதிகம் வேலைகொடுக்க கூடாது. ஏதேனும் புத்தகம் படித்தால் அதனை உற்று கவனித்து படித்தால் அது கண்களுக்கு சோர்வை கொடுக்கும். ஆகையால் முடிந்தளவு கண்களை அதிகம் வேலைகொடுக்காமல் பார்த்துக்கொள்வது நல்லது.

அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனென்றால் உடலுக்கு தேவையான முக்கியமான பொருட்களில் தண்ணீர் முக்கியமானது அதனை சரியாக உடலுக்கு சேர்ப்பது நல்லது.

அதேபோல் புதினா இலையை மசித்து அதில் வரும் சாறை கண்களுக்கு கீழ் தடவி 10 அல்லது 15 நிமிடம் காயவைத்து கழுவி வருவதால் முகத்தில் இருக்கும் கருவளையங்கள் மறையும்.

Leave a Reply