நரை முடி கருப்பாக மாற எண்ணெய்…!!

0

கார்போக அரிசி – 50 கிராம்
கருவேப்பிலை – 1 கையளவு
நெல்லிமுள்ளி – 50 கிராம்
தேங்காய் எண்ணெய் – 1/2 லிட்டர்
செய்முறை:

முதலில் கார்போக அரிசியை மிக்ஸியில் போட்டு கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைக்க வேண்டும். அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றவும்.

பின்பு அரைத்து வைத்திருக்கும் பொடி, கருவேப்பிலை, நெல்லிக்காய் முள்ளி மூன்றையும் சேர்க்கவும். அடுப்பை குறைவான தீயிலே வைத்து 10 நிமிடம் வரை எண்ணெய் சூடாக வேண்டும்.

நம் எண்ணெயில் சேர்த்திருக்கும் பொருட்கள் எல்லாம் சேர்ந்து நிறம் மாறும். அப்போது அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த எண்ணெய் காய்ச்சிய பிறகு ஒரு 8 மணி நேரம் அப்படியே இருக்கட்டும்.

அதன் பிறகு காய்த்த எண்ணெயை ஒரு பாட்டிலில் வடிகட்டி ஊற்றி வையுங்கள். மூன்று மாதம் வரைக்கும் இந்த எண்ணெய் கெட்டுப்போகாது.

தினமும் தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்ப்பது போலவே இந்த எண்ணெயும் தேய்த்து கொள்ளவும். வெளியில் செல்லும் போது தலையில் எண்ணெய் அதிகமாக இருக்கும் என்று நினைப்பவர்கள் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை வைக்கலாம்.

இப்படி நீங்கள் தேய்த்து வர விரைவிலே வெள்ளையான முடி கருப்பாக மாறிவிடும்.

Leave a Reply