சிபெட்கோவுக்கு ரூ.700 மில்லியன்; ஆனால் விநியோகிப்பு திகதி இல்லை.

0

எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக 700 மில்லியன் ரூபாவை சிபெட்கோ நிறுவனத்திற்கு செலுத்தியுள்ளபோதும் , எனினும், விநியோகிப்பதற்கான உறுதியான திகதி வழங்கப்படவில்லை எனவும் அகில இலங்கை எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நெருக்கடி சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் ஏற்கனவே பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் அச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

எனினும், எரிபொருள் வாங்கும் நம்பிக்கையில் மக்கள் இன்னும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply