அரசிற்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கொழும்பு-பஞ்சிகாவத்தை பிரதான வீதியை மறித்து தற்போது பொது மக்கள் இன்று போராடடத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் மூன்று நாட்கள் எரிபொருளுக்காக வரிசையில் நின்றும், இன்று எரிபொருள் இல்லை என கூறியமையால் கோபமடைந்த மக்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் தமக்கான எரிப்பொருளை வழங்காதவரை அங்கிருந்து செல்ல போவதில்லை என கூறியுள்ளனர்.